தீரா ஆசை
சேரா இடம் சேர்வதற்குத்
தீரா ஆசை மீக்குற்றுத்
தீராவெளி தேடிச்
சிறு வெளிச்சம் கொளுத்திப்
பெரும்
சூறாவளிக்குள் பறக்கின்ற
என் மின்மினிப் பூச்சியே
ஆராவது போய்க் கண்டதுமுண்டோ
அந்த அகண்ட வெளிக்கொரு
வழியுமுண்டோ....
கோடா கோடித் திரை விலகிக்
கெண்டைக் காலின் தரிசனம்
கிடைக்கும் என்றா நீ
பறந்து செல்கின்றாய்
என் கண்மணிப் பூச்சியே...
போ.. போ,
நாட்டம் என்பது
நம் கையில் இல்லை என்பதறியாயோ
அட, என் ஆன்மிகப் பூச்சியே..
O
தீரன்
No comments:
Post a Comment