பஞ்ச பூதம்
----_-------
ஓடும் நீரில் எல்லாம்
உன் பெயரை வாசிக்க முயல்கிறேன்..
வீசி வரும் காற்றில்
உன் பெயர் வாசிக்க
ஒரு புது மொழி யாசிக்கின்றேன்
நெருப்பின் வடிவங்களிலும்
உன் பெயரின் அர்த்தங்கள் தீயெனத் தகிப்பதை
உணர்கின்றேன்.
ஆகாயம் முழுவதும்
அலைகிறேன்
ஆனாலும்
உன் பெயரை அறிகிலேன்..
பஞ்சபூதங்களிலும்
பரவியிருக்கும் அந்தப்
பெயரில்லாப் பெயரை
எவ்வாறு அழைப்பேன்..?
O
தீரன்