கூவல், சேவல்
============
தடாரித்து எழுந்து
இறக்கை அடித்துக் கொக்கரித்து
ஏன் கூவுகிறாய் சேவலே..
ஈரானின் ஏவுகனைகள் வானில்
சீறிச் செல்வதைப் பார்த்தாயோ
ஈமானிய மலக்கு ஒன்று வந்திங்கு
இறங்கி வருவதைக் கண்டாயோ
நூறானியாப் பள்ளி மோதின் இன்னும்
சுபஹுக்கு வரவில்லை என்றா
உரத்துச் சொல்லுகிறாய்..
ஊரானின் கோழி திருடி
உம்மா பேரில் கத்தம் ஓதும்
மீரானின் அடாச் செயல் அறிந்தாயோ சேவலே
தடாரித்து எழுந்து
இறக்கை அடித்துக் கொக்கரித்துக்
கூவுகிறாய் என் சேவலே..
0
தீரன்.