Monday, April 25, 2022

சிறுவர் பாடல்கள்

 ஸ்ரீலங்கா


சிறியநாடு நமது நாடு

சிறிலங்கா எங்கள் நாடு


 உரியநாடு ழூன்று இனமும்

பிறந்தநாடு சிறந்த நாடு


அரியநாடு அனைத்து வளமும்

அமைந்தநாடு அழகுநாடு


வெற்றி சுதந்திரம் வென்றநாடு

இரத்தினதுவீபம்  எங்கள்நாடு


சுற்றிச் சமுத்திரம் சு10ழ்ந்தநாடு

சுந்தர இலங்கை எம்தாய்நாடு.


000


விண்வெளி


பரந்து விரிந்த விண்வெளியே- உன்னில்

போதிந்து இருக்கும் புதுமைகளை கூறிடுவாயே..


எண்ணற்ற கோள்கள் மிதப்பதுவும்

எங’கனும் அவையெலாம் தொங்குவதும்

எண்ணற்ற விண்மீன்கள் நீந்துவதுவும்

கவினுறும் காட்சிகளாய் தெரிவதுவும்


பால்வீதி பலதூரம் பாய்வதுவும்

பகலிரவு மாறிமாறிச் சுழலுவதும்

நீள்வெளி  யாய்வானம்  விரிவதுவும்

நிலமெல்லாம் மழையருவி பொழிவதுவும்..


கோடிமின்னல் பளிச்சிட்டு முழங்குவதும்

குவலயத்தைப் பேரிடிகள் குலுக்குவதும்

கூடிவரும் மேகங்கள் கலைவதுவும்

முதலொளி எங்ஙனுமே பரவுவதும்..


புரந்து விரிந்த விண்வெளியே- உன்னில்

போதிந்து இருக்கும் புதுமைகளை கூறிடுவாயே..


000


கணினிp


ஒளிரும் திரையில் ஓருலகம்

மிளிரும் கணினி பயில்வோமே

தெளிவுறு உருவினில் தெரியவரும்

அகிலத்தின் ரகசியம் அறிவோமே..


விரிந்திடும் வையக வலையினிலே

வியப்புறு செய்திகள் காண்போமே

தெரிந்திடும் இணையத் தளத்தினிலே

உலவியே தகவல்கள் அறிவோமே


மென்பொருள் வன்போருள் தெரிந்திடுவொம்

கண்ணுறு அய்க்கண்கள் காண்போமே

சுட்டியின் அசைவினில் அகிலமெலாம்

சுற்றியே வரலாம் தோழர்களே…


000

நிலா


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

பூமியினைச் சுற்றிவரப் போகிறேன்

புதுமைகள் கண்டுவரப் போகிறேன்.


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

சு10ரியனைச் சுற்றி வரப் போகிறேன்

சோபிதங்கள் சொல்லி வரப் போகிறேன்


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

கிரகங்களைக் கண்டுவரப் போகிறேன்

கிரமமான பாதையிலே போகிறேன்.


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

பால்வீதியைப் பார்த்துவரப்போகிறேன்

வால்வெள்ளியை வாங்கிவரப் போகிறேன்.


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

வட்டமான வானவில்லைக் கொண்டுவந்து

வடிவான பிள்ளை உனக்குத் தரப் போகிறேன்.


000


தொலைபேசிp


கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…


முணியடிக்குது ஒரு கருவி

மனிதருக்கு வருது செய்தி

ஒலியெழுப்பும் அக் கருவி

உடனுக்குடன் பேசுது விரும்பி

கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…



செல்லுமிடமெல்லாம் செய்தி

செல்லிடப்பேசியொரு கருவி

அனுப்பிடும் பலகுறுஞ்யெ;தி

அனுப்புநர் மகம்காணும் வசதி

கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…



ஆகாயஅலைகளில் ஊடுறுவி

ஆட்களை அடைந்திடும் தொலையருவி

ஆஹாää அமைத்தான் அலக்சான்டர்

குpரகம்பெல்லை வாழ்த்துவோம் உலகமாந்தர்...

கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…

000



அஞ்சல் அலுவலகம்.


அஞ்சல் அலுவலகம் சென்றிடலாம்.

அலுவல்கள் பலவும் ஆற்றிடலாம்.


முத்திரை வாங்கி ஒட்டிடலாம்.

முழுவிடமும் கடிதங்கள் அனுப்பிடலாம்.

அஞ்சல்அட்டைகள் வாங்கிடலாம்.

அதிலேயே எழுதி அனப்பிடலாம்.


விரைவுத் தந்திகள் கொடுத்திடலாம்.

விரும்பும் பணமும் அனுப்பிடலாம்

விரைந்துவருமத் தபாற்பையில்

இருந்து மடல்கள் பெற்றிடலாம்.


தோலைநகல் செய்திகள் பார்த்திடலாம்

தொலைபேசி எங்கும் பேசிடலாம்.

ஆயிரம் சேவைகள் ஆற்றிடும்

அஞசல் திணைக்களம் வாழியவே…!


000




சுனாமி


வெட்டவெளி ஆகாயத்தில்  வட்டவடிவான பூமிப் பந்தின்

விட்டத்தடிக் கடலுக்குள்ளே பீறிட்டெழுந்திடும் சுனாமியடி


தட்டுமாறி  ஓட்டுப் பாறை சற்றுத் தூரத்தில் தள்ளிவிட

தட்டுப்பாறைத் தள்ளிக்கிளம்பி தந்திடும் சுனாமியைச் சொல்லியடி


கட்டுமீறிக் கடலெ ழுந்து முட்டிப்பிளந்திடும் மூர்க்க அலைகள்

எட்டிப்பாயும் பே ரலைகள் நாட்டையழித்திடும் சுனாமியடி..


தட்டழிந்து தாறுமாறாய் அட்டதிக்கும் ஆர்ப்பரிக்கும்

இட்டமுடன் எட்டிப்பாய்ந்து தாக்கியழித்திடும் சொல்லியடி


கிட்டக்கிட்ட ஆழிச்சுழல்  சுருட்டியிழுக்கும் ஆழிக்குள்ளே

கட்டவிழ்த்துக் கடுவேகத்துடன்  உச்சத்தில்  பாயும்    சுனாமியடி


கட்டுப்பாட்டை மீறிக்கடல் திட்டுமணல் ஏறிவரும்

கெட்டலைந்து ஊரையடித்து ஆழிக்கோள் காவுகள் கொள்ளுமடி


நாட்டையழித்த மூர்;க்கச் சுனாமியைப் பாட்டில் சொன்னவர்தமக்குள்ளே

ஏட்டில்வடித்து  நாட்டுக்களித்தவன் பாட்டில் தீரனென்று சொல்லியடி..




வாழும் பாவலரே

 பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

*************************************

ஊனாகி யூனிலுயி ராகியெவ்வு லகுமாயொன்றா யிரண்டுமாகி

உள்ளாகி வெளியாகி் யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமாகி

கானாகி மலையாகி வளைகடலு மாகிமலை

கானக விலங்குமாகி

கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளி

கண்ட பொருளெவையு மாகி

நானாகி நீயாகி யவனாகி யவளாகி

நாதமொடு பூதமாகி

நாடுமொளி புரியவடி யேனுமுமை

நம்பினேன் நன்மை தந்தா ளுதற்கே

வானோரு மடிபணித லுள்ளநீர் பின்றொடர

வள்ள லிறஸூல் வருகவே

வளருமருள் நிறைகுடி வாழுமென் னிரு

கண்மணியே முஹ்யித்தீனே!

-------------------,இது  குணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் பாடல்... அன்னவர்களின் பாடலை இறை துதியாகக் கொண்டு .......

கவுரமிக்க தலைவர்- கண்ணியமிக்க  பிரதம அதிதிகள்- உரையாளர்கள்- கவிஞர்கள்- கற்றறிந்த  சபையினர்  -- அறிவிப்பாளர்- மைக்கு செட்டுக் காரர்  அனைவருக்கும்  எனது  இனிய  சலாமும் சொபனங்களும் இனிய  தியாகத் திருநாள்  வாழ்த்துக்களும் உரித்த்தாகுக.

அஸ்ஸலாமு அலைக்கும் –வணக்கம்

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

௦௦

என்னை கவிதை பாடச் சொல்கிறார்  தலைவர்

ஒரு  ஊமையனை பாட்டுப் பாடச் சொல்கிறார்  தலைவர்

ஒரு  ஈ மெயிலை கொம்போஸ் செய்து   

ஒரு  ஆமையிலே  கொண்டு போகச் சொல்கிறார் .....

ஒத்தைக் கால் முடவனை 

ஒலிம்பிக்கில்  ஓடு  என்கிறார்

இதெல்லாம்  நடக்கிற  காரியமா ...?

இதெல்லாம்  நடக்கிற  காரியமா ...?

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

 

௦௦

இது என் கவிதை நேரம்

கதைத்திருந்தது போதுமினிக்

காதுக்குள் கொஞ்சம் கவிதை ஊற்று

நீ ஒரு  கவி ஊற்று என்கிறார்  தலைவர்

 

நீ தீரன்.. கவிகளில்  சூரன்..

கதைகளில் வீரன்...சொந்த  ஊரன்..

ஒரு  கவிதை கூறேன் .. 

என்கிறார் தலைவர்;,,,,ஐயஹோ...

௦௦

 

என் இலக்கிய  வேர் பாய

நீர்  விட்ட 

சேர்  இந்தப்

பீர்  முகம்மது

சேர்.தான்...

எனவேதான்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தேன்

ஆனால்  கவிதை கொண்டு வரவில்லை

 

௦௦

இந்த நிகழ்ச்சிக்கு பின்னால்

புகழ்ச்சியும்  உண்டு..இகழ்ச்சியும்  உண்டு...

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

௦௦

 

அழைப்பிதழ் அடிக்க

அச்சுக் கந்தோருக்குப் போனேன் – இடையில்

பெச்சுப்  போனது   பைக்கு

அச்சுப் பெருநாள் காலம்

பெச்சுக் கடை  பூட்டு – ரோட்டோரம்

வெச்சுப் பூட்டி விட்டு

ஓட்டோவில் போவோம் என்று

பைக்குள்  கையை  விட்டால்

அஞ்சு சதமும் இல்லை

அச்சுப் பெருநாளைக்கு

அச்சுப் பலகாரம்  செய்ய

மிச்சம் மீதி இல்லாம –பொஞ்சாதி

பக்கட்டைக் குடைஞ்சிருந்தாள்

பக்கட்டுக்குள் பொன்னாங்கண்ணி

கடைஞ்சிருந்தாள் .....

 

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

௦௦

அந்த  நேரம் தொடக்கம்

இந்த நேரம் வரையும்

ஒரே டென்ஷன்தான் ...என்ன  செய்ய

நான் பென்சன் ..ஆள்..

௦௦

எனவே

கவிதை  ஒண்டும்  எழுதவில்லை..

ஆயினும்

ஒரு  கவிதை கொண்டு  வந்துள்ளேன்

௦௦  

தென் கிழக்கின்  உமர்கையாம்

அரும்பு மீசை தத்துவஞானி

காணாமற் போன ஒரு தங்கக் காசு

என்றும் எம் மனதில்

வாழும் பாவலர்  எழுதிய

ஒரு கவிதை கொண்டு வந்துள்ளேன் ...

கேளுங்கள்

௦௦

 

இரணக் கோல்

இரணக் கோல்

 

காக்கா  அக்கம்புதன்னைக்

காலால்  மிதிக்காதே

ஏக்கம் மிகுந்த  எங்கள்

இரணக் கோல்..கதிரடிக்கும்

கம்புதான்  எண்களினைக்

காக்கும் படை –அதுவே

நம்பிக்கை தரும் ஒரு கோல்

நாளை  சில பேருக்கு

சூட்டுக் கோல்  ஆகிடலாம்

சுரணை வருமட்டும்எங்கள்

பாட்டைச் சுரண்டுபவர்

பழிவாங்கப் படுவர்

இந் நீட்டுக் கோல்  அவர்களது

நெஞ்சைத் திருத்திடலாம்

கட்டாதே பல்லைச்  ச்சே

காக்கா உன்  காலை  எடு.

 

௦௦

மிக்க  நன்றிகள்...

அஸ்ஸலாமு அலைக்கும்  வணக்கம்


சம்மாந்துறை எங்கள் தாயகம்....! சம்மாந்துறை எங்கள் தாயுமே...!.."

 

<<<<< கவியரங்கம் >>>>>>

" சம்மாந்துறை எங்கள் தாயகம்....! 
சம்மாந்துறை எங்கள் தாயுமே...!.."

31.12.2017 ஞாயிறு மு.ப. 9.00

கவி உரைப்போர்...:::

1. பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்.

2. கலாபூஷணம், கலைமணி ஏ.சி. இஸ்மாலெப்பை

3. சாமசிறீ கவிதாயினி மஷூரா சுஹுர்தீன்.

4. கவிஞர். அலியார் டீ.ஒ.

5. கவிஞர் இஸ்மா பரீத்

விருந்தினர் கவிஞர்....
கவிஞர் தீரன் ஆர்.எம். நௌசாத்

முன்னிலை:
மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீத் விருது பெற்ற-
அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார்

கவி மழையில் நனைந்திட 
<<
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் >>

ஏற்பாட்டுப் பணியில்---

-- அபு நஜாத் பௌசுதீன்

 

 

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

குன்னென்ற சொல்லால்

குவலயங்கள் படைத்தளித்தானே ..வல்லவன்

எல்லாமுமாய்  காட்சி தரும்  அவன் திருக் காட்சியை   

என்னென்பேன் அவன் பெரும் மாட்சியை...

அவன் புகழ் ஓதுவோம் ...

௦௦

மேலும்

ரஹ்மத்துல் லில் ஆலமீன் எங்கள் கண்மணி ரசூலுல்லாஹ்அன்னவர்கள் மீதில் சலாமும் சலவாத்தும் சொல்கிறேன்...

௦௦

தங்கத் தலைமகன் சிங்கக் குலமகன்

எம் எ அப்துல் மஜீதென்னும்

அழகன் ..அவன் ஆண்ட

சம்மாந்துறை மண்ணில்

சந்தக் கவிதை பாட வந்தேன்

சொந்தக் கவிதைதான்...சொற்பிழைகள் இருப்பின்

சம்பந்தக்கார ஊரார் நீங்கள்

சற்றுப் பிழை பொறுக்க வேண்டுகிறேன்

௦௦  

சங்கப் புலவர் வழிவந்த இன்பத்தமிழ்த் தோன்றலாம்

தங்கத் தலைவர் அவர்கட்கும்

அன்னவர் முன்னால்

எடுத்துச் சில பாட்டு

தொடுத்துக் கோர்த்து,,அடுத்தடுத்துப் பாட வந்த

அன்புத் தோழமைகள் அனைவருக்கும்///

 

பார்த்து ரசித்துப் பாட்டு ருசிக்க

சேர்த்து வந்த சபையோரே அனைவருக்கும் –

சாந்தி சமாதானம் ...நிலவுக ...

0

இங்கு சபையிலும் கூட

சந்தக் கவிஞரும் அந்தக் கவிஞரும் இந்தக் கவிஞரும்

என்- சொந்தகாரக்க் கவிஞரும் உள்ளார்கள்..

ரெண்டொரு பந்தக் கவிஞரும் பதுங்கி இருக்கின்றார்..

எந்தக் கொம்பர் இருந்தால் எனக்கென்ன .. எனக்கென்ன.

நான் தீரன்.. கவிகளில்  சூரன்..

கதைகளில் வீரன்...சாய்ந்தமரு  தூரன்.

ஒரு  கவிதை தாரன்..... சுவைத்துப்  பாரன் ...

௦௦

சம்மாந்துறை எங்கள் தாயகம்....!

சம்மாந்துறை எங்கள் தாயுமே...!.."

-----------------------------------------------தீரன் .ஆர்.எம். நௌஷாத்

 

சம்மாந்துறை உங்களின் தாய்தான்

சும்மா சொல்லக் கூடாது

சம்மாந்துறை எங்கள் தாயுமே...

௦௦..

’கரையுடைத்து கடல் பொங்கித்

தரை கடந்து தாவி வர

துறை கடந்து விரைந்தேகிய

சாய்ந்தமருது மக்களை 

அரவணைத்து ஆதரித்த சம்மாநதுறை

எங்கள் தாயும்தான்...

௦௦

தண்ணீர் துரத்திய எங்களின்

கண்ணீர் துடைத்த

சம்மாந்துறை

எங்கள் தாயும்தான்.

௦௦

கடல் விழுங்கிய எங்கள்

உடல்களை மார்பில் அடக்கிய

சம்மாந்துறை

எங்களுக்கும்  தாய்தான்.

௦௦

சமுத்திரம் விரட்டிய எங்களுக்கு

சத்திரம் தந்து தங்க வைத்து

சரித்திரம் படைத்த  

சம்மாந்துறை

எங்களின் தாயும்தான்

௦௦   

 

அகதியாய் ஓடிவந்த  எங்களுக்கு

உஹது மலையென

அடைக்கலம் தந்த சம்மாந்துறை

எங்கள் தாயுமே..

௦௦

பீடைச் சுனாமி வந்து

எங்கள் பிடவையை பறித்த போது

ஆடை தந்து மானம் காத்த

சம்மாந்துறை

எங்கள் தாயும்தான்....

௦௦

வீறு கொண்டு

அலைகள் விரட்டிய போது

சோறு தந்து பசி தீர்த்த

சம்மாந்துறை

எங்களுக்கும் தாயன்றோ..?....

௦௦

ஆழிப் பேரலை எங்களை

அள்ளிச் சுருட்டிய போது

வாழி  என வரவேற்ற 

சம்மாந்துறை

எங்களுக்கும் தாய்தான்

௦௦

உருண்ட அலைகள்

உச்சாரத்தில் உசந்து வந்த போது

மிரண்டு ஓடி வந்த எம்மை

திரண்டு வந்து உதவி செய்த

சம்மாந்துறைத் தாயல்லவா..?

௦௦

 

 

தாக்கிய அலைகளின் சுழிகளில்

சிக்கித் தவித்த நேரம்

ஆக்கிய உணவுடன் ஓடி வந்த

சம்மாந்துறை

எங்களுக்கும் தாய்தான்  

௦௦

ஆழித் தாயே எங்களை

அழித்த போது

வந்தெம்மை 

வாழ்வித்தாயே அம்மா எங்கள்

சம்மாந்துறைத தாயே..உனக்கு

என்ன கைம்மாறு நாம் செய்ய...?

என்ன கைம்மாறு நாம் செய்ய...?

௦௦

மிக்க நன்றிகள் சபையோரே...

வஸ்ஸலாம் .....

000

பொன்னாடை போர்த்துக ஒரு பொற்கிழியும் தந்திடுக

 பொன்னாடை போர்த்துக ஒரு பொற்கிழியும் தந்திடுக 



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

குன்னென்ற சொல்லால்

குவலயங்கள் படைத்தளித்தானே ..வல்லவன்

எல்லாமுமாய்  காட்சி தரும்  அவன் திருக் காட்சியை   

என்னென்பேன் அவன் பெரும் மாட்சியை...

அவன் புகழ் ஓதுவோம் ...

௦௦

தங்கத் தலைவர் தமிழ்த் தென்றல் -  அவர்

சந்தக் கவிதைபாடும் ஒரு சந்தனத் தென்றல்- அவர்

சங்கப் புலவர் வழிவந்த இன்பத்தமிழ்த் தோன்றல்..

அன்னவர் முன்னால்

எடுத்துச் சில பாட்டு

தொடுத்துக் கோர்த்து,,அடுத்தடுத்துப் பாட வந்த

அன்புத் தோழமைகள் அனைவருக்கும்///

பார்த்து ரசித்துப் பாட்டு ருசிக்க

சேர்த்து வந்த சபையோரே அனைவருக்கும் -- 

சாந்தி சமாதானம் ...நிலவுக ...

இன்னும்

பாக்கு நீரிணை கடந்து

இலங்கையைப்

பார்க்க வந்த தமிழகத்தின்  பாவலர்களே

உங்களை

பார்க்கப் பேசப் பழக –உங்கள்

பாக்கள் கேட்க ஆவல் மிகக் கொண்டோம்

வருக எங்கள்  நாட்டின்

வாசலெங்கும் வண்ணத் தமிழ் மழை பொழிக...

.

இங்கு

சந்தக் கவிஞரும் அந்தக் கவிஞரும் இந்தக் கவிஞரும்

என்- சொந்தக் கவிஞரும் உள்ளார்கள்..ரெண்டொரு

பந்தக் கவிஞரும் பதுங்கி இருக்கின்றார்..

எந்தக் கொம்பர் இருந்தால்  எனக்கென்ன .. எனக்கென்ன.

நான் தீரன்.. கவிகளில்  சூரன்..

கதைகளில் வீரன்...சொந்த  ஊரன்..

ஒரு  கவிதை தாரன்.. சுவைத்துப்  பாரன் ...

௦௦

பொன்னாடை போர்த்துக ஒரு

பொற்கிழியும் தந்திடுக,,,,,,

கண்ணான மனையாள்

கனநாளாய் கத்துகிறாள்

கண்ணீராய்ச் சிந்துகிறாள்

கடிந்து மிக வுரைக்கின்றாள்

பெண்ணான நானுமக்கு

பொன்னாக வாய்த்தேனே

என்னானது என் வாழ்வு

வீணானது நானாவது

கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன் என்று

உண்ணாமல் உறங்காமல்

உம்முடனே வாழ்கின்றேன்-நீரோ 

தன்னானா பின்னானா என்று

பண்ணான பாட்டெல்லாம்

படிக்கின்றீர் கிழிக்கின்றீர்

ஐயோ..ஐயோ... உமக்குப்

பொன்னாடை  ஒன்றில்லை

போர்த்தத்தான் ஆளில்லை

பொற்கிழியும் தானில்லை

௦௦

இன்னா நேற்று எழுதியவன்

அன்னா பாரும் அவனும் இவனும்

மின்னா மல் முழங்காமல் 

என்னா பரிசெல்லாம் வாங்குகிறான்.

ஐயோ..ஐயோ...இதைச்

சொன்னா  உமக்குக் கோபம்...மட்டும்

முன்னால் மூக்கில் வருகிறது....

௦௦

கன்னாபின்னாக் கவிஞரெல்லாம்

பொன்னாடைக்குள் புகுந்து

புகைப்படத்தில்  சிரிக்கையில்

கண்ணாளாய் கவிபாடும்

கவிஞன் நானென்று

பீற்றுகிறீர்....பெருமையாகச்

சாற்றுகிறீர்...தமிழைப்

போற்றுகிறீர் உமக்குப்

பொன்னாடை போர்த்த

ஒரு ஆள்தானில்லை...

பொற்கிழி தரவும் வக்கில்லை.

௦௦

சாதியம் எழுதினவனுக்கு

சாஹித்திய விருதாம்

பாலியல் பாடியவனுக்கு

பாராட்டுப் பத்திரமாம்

செத்தவனை புகழ்ந்தவனுக்கு

செக்கும் காசுமாம்

நிண்டவன் கண்டவனுக்கும்

நினைவுச் சின்னமாம்

 ஹையோ..ஹையோ...

என்னதான் கிழிக்கின்றீர்

எலி போல  முளிக்கின்ரீர்-ஒரு

பொன்னாடைக்கும் வக்கில்லாத

பன்னாடை புலவர்தான்  நீர்....

௦௦

என்றெல்லாம் எந்தன்

கண்ணான மனையாள்

கனநாளாய் கத்துகிறாள்

கண்ணீராய்ச் சிந்துகிறாள்

கடிந்து மிக வுரைக்கின்றாள்

௦௦ 

இந்தப்

பெண்ணாளின் பிதற்றலை

என்னான்னு சொல்வேன்

பொன்னுக்கும் பொருளுக்கும்

பண் எழுதாத பாவலன் நான் என்று 

எப்படிச் சொல்வேன்...?

௦௦

கண்ணாழரே... கணவரே...

மன்னவரே மறை கழண்டவரே..

சொன்னால் கோபிக்க மாட்டீரே...

சொல்கிறேன்...ஒரு விஷயம்

௦௦

என்னாது சொல்லு

என்னவோ எல்லாம்

சொன்னாய்...இதையும்தான்

சொன்னால் கேட்பேன் சொல்லேன்..

௦௦

கண்ணாளா உமக்குக்

கன்-நாளா 

கண்ணும்  மங்குது...இப்போ ஒரு

மண்ணும் தெரிவதில்லை...

இதை வெச்சு

பண்ணான பாட்டொன்று எழுதும்

அண்ணாமாரே.. அண்ணாமாரே...

கண்ணாஸ்பத்திரிக்கு போய்-நானும்

கண்சிகிச்சை செய்ய வேணும்-மூக்குக்

கண்ணா  டியும் மாட்ட வேணும்

வண்ணா னுக்குக் கொடுக்கவும்

வசதியில்லை... உண்ணா  மல் விட்டு

ஒரு கிழமையாச்சு  

பொன்னாய்க்கொடுக்கும் புரவலரே

பொருள் கொடுக்க மாட்டீரோ...

இந் நாய் இரந்து கேட்கின்றேன்

வீணாய் இறந்த பின்தான்

வாழ்த்த நீரும் வருவீரோ..?

௦௦ 

என்றொரு பாட்டெழுதி

போடுமையா புலவரே..கணவரே...

பேஸ்புக்கில் பேப்பர்களில்...

௦௦

பாவப்பட்டு யாரேனும்

பொன்னாடை போர்த்தியொரு

பொற்கிழியும் அளிப்பாரெனில்- அப்

பொன்னாடை உமக்கு அந்தப்

பொற்கிழி எனக்கு, --ஆஹா....

பொன்னாடை உமக்ககே அந்தப்

பொற்கிழி எனக்கே.,

௦௦

மிக்க நன்றிகள் சபையோரே...

வஸ்ஸலாம் .....