சூன்யவெளி
------------
இடமில்லா ஓரிடத்தில்
நாளில்லா ஒரு நாழிகையில்
ஆளில்லா ஒரு கூட்டத்தில்,
இன்னும்,
இருளும் ஒளியுமில்லாப் பொழுதில்
பூமியும் வானமுமில்லாதொரு
தளத்தில்,
மேலும் கீழுமில்லா
ஓரிடத்தில்,
திசைகளற்ற ஒரு திசையில்,
தொடக்கமும் முடிவுமில்லா
அந்த எல்லையில்,
நான் வருவேனோ
இறைவா,
வார்த்தையில்லாதொரு வசனத்தில்
என் காதலைச் சொல்லி அழ!
O
தீரன்..
No comments:
Post a Comment