கவிதைத்தானம்
என்
முற்றம் முழுவதும்
இறைத்திருக்கிறேன்
என் கவிதைகளை
சுற்றம் சூழ வருக
குருவிகளே..
சற்றும் விடாது
கொத்திச் செல்லுங்கள்
குற்றம் சுமத்தி
என்னைப்
பற்றறுத்துப்
பிரிந்தவளுக்குப்
பாடல் இனி இல்லை.
காலக்
கூற்றவன் வந்தென்
கழுத்தைப் பற்றும் வரை
எழுதியவற்றை எறிவேன்
முற்றம் முழுக்க...
ஓ.. சிட்டுக் குருவிகளே,
வந்துங்கள்
அலகு நிறைய
அள்ளிச் செல்லுங்கள்..
அடுத்த முறை
வந்தால்
எனக்காக நீங்கள்
அஞ்சலிக்கவும் கூடும்.
இப்போதே,
இற்றை வரை நான்
இயற்றியவற்றைச்
சுற்றி எறிகிறேன்
பற்றிச் செல்க
என் சிட்டுக்களே..
O
தீரன்..