கூடு கலைதல்
-------------
சிதைத்து எறிந்தது யார்
பட்டுச் சிறகால் பறந்து பறந்து நீ
கட்டிய வீட்டைக் கலைத்தது யார்?
பொட்டுப் பொட்டாய் நீ இட்டிருந்த
முட்டைகளை மோதியது எது?
கட்டுச் செட்டாய் நீ அடைக்காத்ததை
விட்டெறிந்த விரோதியவன் எவன்?
தொட்டணைக்கக் காத்திருந்த போது
சட்டெனக் கனவைக் கலைத்துக்
கொடூரம் புரிந்ததந்த விதியோ..
கொட்டும் கண்ணீருக்கென்ன பதிலோ?
விட்டு விட முடியா வேதனைதான்
தட்டிவிடத் தாங்கொணாத் துயரம்தான்
முட்டி அழும் சிட்டுக்குருவியுன் சோகம்
கண்டு இந்தக் காடெல்லாம் அழுகிறதே..
O
தீரன்...
No comments:
Post a Comment