. தனிமைத்
தீ
வெறிச்சோடிக்
கிடக்கிறது
என் வானம்
கானம் இசைத்த காற்றைக்
காணவில்லை என்று..
மேகம் சுமந்து பொழிந்த
கவிதை மழை
ஓய்ந்து போனதின்று..
சாய்ந்தமருது முழுவதும்
காய்ந்து போய்
கிடக்கிறது..
முற்றும் என்று நீ
முகம் மறைத்ததில், என்
முற்றம் முழுவதும்
வற்றிப் போனது..
மோகனம் பாடிய குரல்
இன்று
கானகம் ஏகியதால்
வானகம் எல்லாம், வீணே
வெறிச்சோடிக்
கிடக்கிறது.
தனிமைத் தீ
என்னைத்
தின்று
கொண்டிருக்கிறது.
O
No comments:
Post a Comment