இடி விழுந்த கதை
எதற்குச் சொன்னாய்
அந்தக் கதையை...
மூச்சு
முட்டி
விழிகள் வெறிச்சிட்டு
விண்ணைப் பார்க்கவும்
கவிதைகளுக்கு
கபன் இட்டுப்
போர்த்தவும்
தொண்டைக்குள்
கபுருக் குழி தோண்டவும்
நெஞ்சம் முழுவதும்
மஞ்சிப் பலகை மூடவும்
அன்பை இறக்கி
அடக்கம் செய்து,
எனக்கி நானே
தல்க்கீன் ஓதவுமா...
அந்தக் கதையைச்
சொன்னாய்
அன்பே..
O
No comments:
Post a Comment