Wednesday, May 28, 2025

உதிர் காலம்

உதிர் காலம்
===========
முற்றத்தில் நிற்கிறேன்
இனி
முறிந்து விடுவேன்..
முதிர்காலம் இது
இலை உதிர்காலம்
எதிர்காலம் இனியேது
சுற்றமெல்லாம் செல்லரித்து
இற்றுப் போய் நிற்கிறேன்.
என் நிழலில்
இளைப்பாறியவர்கள் எங்கே?
என் கிளைகளில்
பாடி ஆடிய பறவைகள் எங்கே?
ஆணி வேர் அறுந்து
கூனி நிற்கிறேன்
கூப்பிட ஆருமில்லை..
பட்ட மரம் தன்னைக்
கட்டியணைத்து ஒரு
சொட்டுக் கண்ணீர் மல்கி
முத்தமிட யாருளர்?
முற்றத்தில் நிற்கிறேன்..
இனி முறிந்து விடுவேன்..
O

தீரன்.. 

No comments:

Post a Comment