பயணியின் பாடல்
==============
தரித்து நிற்கின்றேன்
தற்காலிகமாக
விருட்ஷம் நீ
வெயிலில்தான்
விரிகுடையாக நிற்கின்றாய்
பயணி நான்
சற்று வெயில் சாய்ந்ததும்
சென்று விடுவேன்
நிரந்தரமாகத்
தங்க வரவில்லை
நிழல் தந்த உனக்கு நன்றி.
தொலைதூரப் பயணிகளும்
தொடர்ந்து வருவர்
தொல்லை என எண்ணாது
தொடர்கிறாய் உன் சேவையை
தகிக்கும் இந்த தணலில்
நிற்கும் உனக்கு நிழல்
தருவது யார் தருவே...
O
தீரன்
No comments:
Post a Comment