Friday, July 21, 2023

கோலம்

 கோலம்...

----------
எத்தனை வர்ணங்கள்
உந்தன் செட்டையில்
வரைந்தவன் யார்..என்
வண்ணத்துப் பூச்சியே
கலர் கலராய்க்
கோலங்களை, உன்னில்
கரைத்து ஊற்றியவனைக்
காட்டமாட்டாயா
என் கனவுப் பூச்சியே..
உன் முதுகில்
நிறம் தீட்டிய தூரிகையை
எங்கே எறிந்தான்
அந்தத் தூயவன்
சொல்ல மாட்டாயா..
இறைவனை விட
வர்ண அழகன் யார்..
அவன் வர்ணத்தில்
தோய்த்து உன்
வாழ்வை வரைந்ததை
நான் வாசிக்கும் முன்னர்
பறந்து விடாதே
என்
பட்டாம்பூச்சியே..
O
✍️தீரன்...

No comments:

Post a Comment