சா, மரம்
---------
உயிர்ப் பறவையைத்
திறந்து விட...
ஆயின்,
திறப்பு என்னிடமில்லை
எமனிடம் சொல்லியும்
எவனிடம் சொல்லியும்
சாவி வரவில்லை
சாவும் வரவில்லை
என் இறக்கைகளை
இயக்குபவனிடம்
ஓய்வதற்கு
அனுமதி கேட்டு,
திக்குத் திசை அறியாத்
தீரா வெளியில்
திரிகிறேன்..
எந்த மரக்கிளையில்
போய் அமர்வேன்...?
O
No comments:
Post a Comment