Friday, July 21, 2023
இலையுதிர்காலம்
இலையுதிர் காலம்
--------------------------
உயிர் விருட்சத்திலிருந்து
ஒவ்வோர் கணமும்
உதிரும் இலைகளில்
உன் பெயர் உண்டா..
துளிரில் விழுவதும்
சருகாய் சறுகுவதும்
இடையில் உதிர்வதுவும்
எந்த இலைக்கு
எந்தக் கணத்தில்
எழுதப்படும்
அந்தக்கணக்கு..
விதிக் காற்று
வீசியடிக்க
எகிறிடும் இலைகளில்...
எந்தன் இலையே
என்று வீழ்வாய்..?
O
தீரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
5 கவிதைகள்
Go Home Gota ∞∞∞∞∞∞∞∞∞∞ இனிமேலும் நீயிருந்தால் கோட்டா இலங்கை உருப்பட மாட்டா இருப்பதை சுருட்டினாய் இனங்களை வெருட்டினாய் இலங்கைக்கு காட்டு...
பாவ வண்டி
பாவ வண்டி எத்தனை காலமாய் இழுத்து வருகிறேன் மேடு பள்ளம் குன்று குழி ஏறி இறங்கி... பாவி ஊர்ந்து வருகிறேன் பரமன் வாசலுக்கு இந்தப் பார வண்...
புதிய வரம்- &- ஆகாயத் தொழுகை
புதிய வரம் கந்தர்வ இசை மீட்டுகிறேன் காது கொடுக்க யாருமிலர் கண்கவர் ஓவியம் தீட்டுகிறேன் கண்ணெடுத்துப் பார்ப்போர் யார்.. ...
No comments:
Post a Comment