சிரம்
பணிக...
கட்டளை
பிறக்க-
நான் நெருப்பு
மண்ணுக்குப்
பணிய
மாட்டேன்
நான்
உயரம் நோக்கி
எழுந்து
எரிபவன்
மண்,
தாழ்ந்து
கிடக்கும் வஸ்து
என்
சிரம் பணிவது
ஒருவனுக்கே
அன்றி
மண்ணுக்கு
அல்ல..
குதர்க்கம்
புரிந்து
சாபம்
பெற்று,
விரட்டப்பட்டு
வீழ்ந்தது.
வாழ்நாள்
முழுவதும்
வரம்
பெற்று வாழ்கிறது.
அடங்க
மறுத்தலின்
அதி
ரகசியம்
ஆரறிவர்?
0
No comments:
Post a Comment