முதுசொம்
நல்லதொரு மரம் இது
மகளே..
முறித்து முழுவதையும்
எறிந்து விடாதே,
முற்றத்தில் நிழல் தந்து
முதுமையில் வாழ்கிறது
தறித்து விடாதே மகளே
விலங்குகளும் பறவைகளும்
தரித்து நின்ற தங்குமடம்..
வெறுத்து விடாதே மகளே,
வெகு காலம் உன்னை
வளர்த்த விருட்ஷம் அதை.
கரித்தும் விடாதே கண்ணே,
கண்போல உன்னைக்
காத்த கற்பகம்..
மரித்த பின்னும்
மனதில் வாழும் மந்திரம்.
பிறப்பிலும் இறப்பிலும்
உனக்காக வாழும்
உன்னத ஜீவன் அது
உனக்கு
உயிர் ஊற்றிய அதற்கு
நீ நீரூற்று...
O
No comments:
Post a Comment