பாவ வண்டி
எத்தனை காலமாய்
இழுத்து வருகிறேன்
மேடு பள்ளம்
குன்று குழி
ஏறி இறங்கி...
பாவி ஊர்ந்து வருகிறேன்
பரமன் வாசலுக்கு
இந்தப் பார வண்டியுடன்.
எத்தனை மூட்டைகள்
எந்தன் முதுகில்..
பாவப் பாரம் அழுந்தி
பாதி மடங்கிய உடம்புடன்
ருக்கூவில் குனிகிறேன்..
சுமையை இறக்கிச்
சுகம் பெறச்
சுஜூதில் விழுகிறேன்
யா.. ஒபூருள் வதூத்!
0
No comments:
Post a Comment