Monday, November 4, 2024

மாதவம்

 மாதவம்

கவிதைகள் வற்றிய
குளத்தில்
யாருக்காக தவமிருக்கிறேன்..
பறவைகள் பறக்காத வானத்தில்
ஏனோ வலை விரிக்கின்றேன்
துண்டு நிலாவை முறித்து
வானம் முழுவதும்
வரைந்த வசனங்கள் வாடுகின்றன
வரவில்லை நீ.
என்றாவது வந்து
வாசிப்பாய் என்று
கவிதையைப் போர்த்திக்
கண்ணுறங்குகின்றேன்
வா..வா
வந்து
என்னைக் கொத்திக் கொண்டு செல்..
o
தீரன் 2024


No comments:

Post a Comment