மாதவம்
பறவைகள் பறக்காத வானத்தில்
ஏனோ வலை விரிக்கின்றேன்
துண்டு நிலாவை முறித்து
வானம் முழுவதும்
வரைந்த வசனங்கள் வாடுகின்றன
வரவில்லை நீ.
என்றாவது வந்து
வாசிப்பாய் என்று
கவிதையைப் போர்த்திக்
கண்ணுறங்குகின்றேன்
வா..வா
வந்து
என்னைக் கொத்திக் கொண்டு செல்..
o
தீரன் 2024
No comments:
Post a Comment