உயிர்த்தல்
குற்றுயிராய்க் கிடக்கிறது
குனிந்து தூக்குகிறேன்.
செதுக்கிச் செப்பம் செய்து
சிறகுகளும் சேர்க்கிறேன்.
தமிழ் உளியால்
விழி திறந்து
ஆன்மாவை அதற்குள்
ஆழமாய் ஊதுகின்றேன்..
ஆஹா,
அற்புதப் படைப்பாய்
அந்தரத்தில் சிறகடித்து
அது பறக்கின்றது.
அந்த அழகில்
உயிர்க்கின்றேன்..
O
No comments:
Post a Comment