நினைவுப் பெருங்கழுதை
கடிவாளம் பிடித்து
இழுத்து வருகிறேன்
பிடிவாதமாய்ப்
பின்னால் வருகிறது
முடிவிலாத நெடும்பாதை
இடைவிடாது தொடர்கிறது.
இளைப்பாறவில்லை..
கடினமான பயணம்
கரடுமுரடுகள் தாண்டிக்
கூப்பிடாமலே,
கூடவே வருகிறது.
கடிந்து துரத்த
முடியவில்லை
பயணமும்
முடிந்த பாடுமில்லை
அடுத்தடுத்து
அடியெடுத்துத் தொடர்கிறது
இந்த
நினைவு என்னும்
பெரும் கழுதை.
O
No comments:
Post a Comment