ஏகமானாய்..
-----------------
மானானாய்
மான் வாழும் கானானாய்
மீனானாய்
மீன் நீந்தும் நீரானாய்
தேனானாய்
தேன் தரும் பூவானாய்
வானானாய்
வானில் நீந்தும் நிலவானாய்
தாயானாய்
தரணியில் அன்பின் ஊற்றானாய்..
ஊனானாய்
உயிர்கள் உறையும் உடலானாய்..
இன்னுமின்னும்,
ஆணானாய் பெண்ணானாய்
நானானாய் நீயானாய்
இவை எல்லாம்
ஏனானாய்..
என்னிறைவா...
O
தீரன்..
No comments:
Post a Comment