உயிருதிர் காலம்
--------------------------
உயிர் விருட்சத்திலிருந்து
ஒவ்வோர் கணமும்
உதிரும் இலைகளில்
உன் பெயர் உண்டா..
துளிரில் விழுவதும்
சருகாய் சறுகுவதும்
இடையில் உதிர்வதுவும்
எந்த இலைக்கு
எந்தக் கணத்தில்
எழுதப்படும்
அந்தக்கணக்கு..
விதிக் காற்று
வீசியடிக்க
எகிறிடும் இலைகளில்...
எந்தன் இலையே
என்று வீழ்வாய்..?
O
✍️ தீரன்..
No comments:
Post a Comment