விதி
விழியில் எழுதி
விதியில் வைத்ததும்
தாளில் எழுதித்
தலையில் வைத்ததும்..
உளியால் செதுக்கி
ஊழியில் வைத்து
வலிகள் தந்ததும்..
தலைச் சுழியில்
தொடங்கி
தலை விதிக்குத்
தலைப்பிட்டதும்..
எழுதுகோல் எடுத்து
எழுத்தெல்லாம் நடத்தும்
விசித்திர விதிக்கு
இந்த விதியை
விதித்தது...
விதியின்
தலைவிதியோ?
0
தீரன்....
No comments:
Post a Comment