Thursday, August 17, 2023

மாயத் தூரிகை

 மாயத் தூரிகை 

===========


அம்புலிக் குவளையில் 

அழகொளி குழைத்து

அடர் வனம் வரைந்து..


ஆழக் கடலும்

அலைகளும்

அள்ளித் தெளித்து 


பாலைத் தகிப்பில் 

கானல்நீர்

பாயச் செய்து,


இன்னும்,

வான் வெளியில்

வெள்ளிப் புள்ளிகள் வைத்து 


பிரபஞ்சத் திரையில்

தானே வரைந்து

தானே இரசிக்கும் 


அந்த

மாய ஓவியன்

எறிந்த தூரிகை 

எங்கே..?

0

தீரன்.

No comments:

Post a Comment