அழகிய
அழைப்பு
என்
உலகத்துக்கு வாருங்கள்
பூக்களால்
ஆன ஒரு
புன்னகை
தருகிறேன்..
கைகள்
கொள்ளும் அளவுக்கு
கவிதைகள்
தருகிறேன்..
இன்னும்
பை நிறைய
பாடல்களும்
தந்து
இதயம் மகிழ
இசைத்தும் காட்டுவேன்.
மாயக்கரம்
ஒன்று
மர்ம வலை
வீசி என்னை
மறைத்திடும்
முன்...,
என்
உலகத்துக்கு வாருங்கள்..
நல்
ஆத்மாக்களே..
O
No comments:
Post a Comment