Wednesday, February 7, 2024

கவிதைப்பறவை

 

கவிதைப்பறவை

 

நீ

என் கவிதைப்பறவை

நீ சிலிர்க்கும் போதெல்லாம்

உதிரும்

சொற்களைப் பொறுக்கித்

தினமொரு

கவிதை எழுதுகிறேன்

நீ

கொத்திக்கொத்திப் போடும்

எழுத்துக்களைக் கோர்த்து

ஒரு கவிதைக்கூடு செய்கிறேன்..

நீ

கொக்கரிக்கும் இசையில்

என் பாடல் விருது பெறுகிறது

என்னை உன்

இறகுகளுக்குள் அடைகார்த்து

கவிதைக்குஞ்சுகளைப்

பெற்றெடு..

வா

என் வாசலுக்கு

வந்து கூவு.

0

 

No comments:

Post a Comment