கவிதைப்பறவை
நீ
என் கவிதைப்பறவை
நீ சிலிர்க்கும்
போதெல்லாம்
உதிரும்
சொற்களைப் பொறுக்கித்
தினமொரு
கவிதை எழுதுகிறேன்
நீ
கொத்திக்கொத்திப்
போடும்
எழுத்துக்களைக்
கோர்த்து
ஒரு கவிதைக்கூடு
செய்கிறேன்..
நீ
கொக்கரிக்கும் இசையில்
என் பாடல் விருது
பெறுகிறது
என்னை உன்
இறகுகளுக்குள்
அடைகார்த்து
கவிதைக்குஞ்சுகளைப்
பெற்றெடு..
வா
என் வாசலுக்கு
வந்து கூவு.
0
No comments:
Post a Comment