நேரலை
நேத்திரத்தில் நீர்
வழிய
நேரலையில்
பார்க்கின்றாய்,
நீ..
கண்ணாக வளர்த்த
வாப்பாவின்
கண்கள் மூடியிருப்பதை
உன்னைக் நீராட்டியவரின்
உடலை
யாரோ குளிப்பாட்டுவதை
தூக்கி வளர்த்தவரின்
ஜனாசாவை, யாரோ
தூக்கிச் சந்தூக்கில்
வைப்பதை
தோளில் உன்னைச்
சுமந்தவரை
யாரோ
தம், தோளில் சுமந்து செல்வதை..
நெஞ்சோடு
அணைத்திருந்தவரின்
மஞ்சிப் பலகையை..
இன்னும்
மீசான் கட்டைகளையும்..
யாரோ வெட்டிய
குளிக்குள்
அவரை இறக்கி வைப்பதை
யார் யாரோ
மண் எறிந்து மூடுவதை...
யாரோ ஒருத்தனைப் போல
நோர்வேயிலிருந்து,
நேரலையில்
பார்த்துக்
கொண்டிருக்கிறாய்
அவர் மகன் நீ..
O
No comments:
Post a Comment