Sunday, March 29, 2026

மழைக்கள்ளன்

 மழைக்கள்ளன்

--------------
இருளடைந்து கிடக்கிறது
என் வானமெல்லாம்
காயப்போட்ட வானவில்லைக்
காணவில்லை
களவு போய் விட்டது..
சூரியனையும்
சுருட்டிக் கொண்டு
சென்று விட்டதும் யாரோ..
மின்னொளி பாய்ச்சி
விழிகளைக் குருடாக்கி
ஒரு நட்சத்திரம் விடாமல்
அள்ளிச் சென்ற கள்வன் எங்கே..
சந்திரனைக் கடத்திச்
சாகடித்தவன் எவன்..
குளிர் போர்வையை வீசி
குவலயத்தை மறைத்துக்
கொள்ளையடித்துக்
கொண்டோடிய
அந்த 'மழை'க்கள்ளன்
அகப்படுவானோ..?
O
தீரன்

No comments:

Post a Comment