வயல் பாட்டு
==========
வயல்வெளி எங்கும் நடந்து திரிகிறேன்
பக்கத்தே ஓடி வரும்
வக்காத்துக் குளம் உன்
பெயர் சொல்லிப் பாய்கிறது
வக்காப் பறவை ஒன்று
உன் விலாசத்தை விசாரிக்கின்றது
பொட்டுப் பூச்சி ஒன்று
உன் போட்டொ கேட்டு
பக்கத்தில் வருகிறது
நாரை ஒன்று
உன் நம்பர் கேட்டு
நச்சரிக்கிறது
புறாவுக்கு உன்னுடன்
பேச வேண்டுமாம் என்று
புறுபுறுக்கிறது
தூர விலகுங்கள் பட்சிகளே
என்னவள் எனக்கு மட்டுமே
என்று நடக்கிறேன்
பைத்தியமோ இவன் என்று
கொக்கு ஒன்று
கொடுப்புக்குள் சிரிக்கிறது.
O
தீரன்
No comments:
Post a Comment