கடவுள் துகள்
பிரபஞ்சத்தின்
அணுப்
பொருளே,
அகங்காரம்
ஏனோ..
சராசரத்தின்
சாரப்
பொருளே
சமரசமாய்
ஆகி விடு
பிரம்மாண்டத்தில்
பிணைந்திருப்பதால்
நீ மட்டுமே
பிரபஞ்சம்
இல்லை
அணுவுக்கணுவாய்
ஆகியிருப்பதில்
ஆனந்தம்
கொள்..
அதற்குள்ளே
களிநடம்
புரி..
அதுவே,
ஆருமறியா
ஆனந்தப்
பெரு நடனம்..
O
No comments:
Post a Comment