மோனம்
வா
என் வாசலுக்கு!
வானத்தின் இரகசியங்களை
என்னில் எழுது..
மோனத்தின் எல்லையை
எனக்கு எடுத்துக் கூறு!
பரவசம் பரவும்
நேரத்தில்
பக்கத்தில் வந்து பாடு
வசீகரிக்கும் அந்த
விண்ணகத்தின்
பாடலை..
பேரானந்த உச்சத்தில், நான்
பிணைந்திருக்கையில்
அந்தப் பேரண்டத்தின்
பேரின்பப் பேச்சைப்
பேசு.
ஏகத்தின் குரலை
எந்தன் செவியினில் ஓது.
ஏகாந்த நிலையில்
ஏறி நான் போகும் போது..
O
No comments:
Post a Comment