.ரஸ்ஸாக்கின்
ரகசியம்
கொட்டிக் கிடக்கின்றன
ஆயிரம் கவிதைகள்
என் வாசலெங்கும்
கொத்தித் தின்னுங்கள்
குருவிகளே..
இரைப்பை நிறைய
தத்தித் தாவிப்
பொறுக்குங்கள்
தெத்தித் தீய்த்துப்
பகிருங்கள்
விருந்தினர் நீங்கள்..
குஞ்சுகளுக்கும்
கொண்டு செல்லுங்கள்
ஊட்டி மகிழுங்கள்
பசியாறிப் பின்
பாட்டொன்று பாடுங்கள்
அதில் என்
ஆன்மா நனையட்டும்..
O
No comments:
Post a Comment