ஆன்மிக இராகம்
கூவிக் கொண்டிரு
என் குயிலே...
காற்று வெளி கிழித்து
கானகமெல்லாம் ஊடுருவி
கல்புக்குள் கசிகின்ற
கந்தர்வ இசையெனவே..
குரலைப் பிழிந்து
பிரபஞ்சக்
கிண்ணத்தில்
ஊற்றுகிறாய்
நானதை அருந்தி,
கனவுக்கு இறக்கை
வைத்துக்
ககனத்தில் பறந்திடல் கூடுமோ..
உள்ளூற
ஊடுருவி ஒலிக்கின்ற
அந்தச்
சோகத்தை சொல்லுகின்ற
செப்பம்தான் என்னே..
ஓ..அந்த
ஆன்மிக இராகத்தில்-
நான்
ஆழ்ந்துவிட ஒண்ணாதோ..?
O
No comments:
Post a Comment